[Representative Image]
மும்பையில் கல்யாண் பகுதியிலுள்ள டிஸ்கானில் உள்ள துர்காசதண் சொசைட்டியில் பிரணிதா தாஸ் என்ற சிறுமி தனது தாயுடன் டியூசன் முடிந்து வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரை 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஆதித்யா காம்ப்ளே என்ற இளைஞர் சிறுமியை தாயின் கண் முன்னே கத்தியால் குத்தியுள்ளார்.
இதனையடுத்து அவரது தாய் தடுக்க முயன்ற போது தாயையும் தள்ளிவிட்டு மீண்டும் தாக்கியுள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், ஆதித்யா 12 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியிடம் ஏற்கனவே ஆதித்யா தெரிவித்த நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த சிறுமியை கத்தியால் குத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் காயமடைந்த நிலையில் ருக்மணி பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…