அரசியல்

பெரியாரின் கனவை நனவாக்க குறியாக இருந்தவர் கலைஞர் – திருமாவளவன்

Published by
லீனா

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் வேறெந்த மாநிலத் தலைவர்களும் நினைத்துக்கூட பார்க்காத சாதனை என திருமாவளவன் பேச்சு. 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் எம்.பி. அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த நாட்டை காப்பற்ற வேண்டும் என்றால் சனாதன சக்திகள் வெளியே செல்ல வேண்டும்; பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே அனைவரையும் ஒன்று சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் வேறெந்த மாநிலத் தலைவர்களும் நினைத்துக்கூட பார்க்காத சாதனை. சாதியற்ற சமூகம் அமைய வேண்டும், அனைத்து சமூகங்களும் ஒன்றாக வாழ வேண்டுமென்று கவலைப்பட்ட ஒரே தலைவர் கலைஞர். மாநில உரிமை பறிபோவதைப்பற்றி இப்போதுதான் எல்லா மாநிலங்களும் கவலைப்படுகின்றன. ஆனால் 1969-ல் ராஜமன்னார் குழுவை அமைத்தார் கலைஞர். மாநில உரிமை கேட்டு முழங்கினார். கலைஞரின் பிறந்தநாளை மாநில சுய ஆட்சி ஜன நாளாக அறிவிக்க வேண்டும்.

முதலமைச்சர் என்கிற நாற்காலியில் அமர்ந்துவிட்ட நிலையிலும் பெரியாரின் கனவை நனவாக்க வேண்டுமென்பதில் குறியாக இருந்தார் கலைஞர். கலைஞரின் என்றென்றும் நினைவுகூரத்தக்க சாதனைகள் சமத்துவபுரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

5 minutes ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

20 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

35 minutes ago

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…

57 minutes ago

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

14 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

14 hours ago