அரசியல்

உள்த்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது அப்பட்டமான பொய்-கே.எஸ்.அழகிரி

Published by
லீனா

மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வழங்கவில்லை என கே.எஸ்.அழகிரி பேட்டி. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உள்த்துறை அமைச்சர் அமித்ஷா அப்பட்டமான பொய்களை பேசி வருகிறார். முன்னாள் பாரத பிரதமர் பேரறிஞர் திரு மன்மோகன் சிங் அவர்களை போன்ற நேர்மையான, நியாயமான ஒரு பிரதமராக மோடியால் ஒருகாலத்திலும் இருக்க முடியாது. 2ஜி குற்றச்சாட்டு வழக்கில் நீதிபதி ஷைனி அவர்கள் இந்த வழக்கில் எந்த விஷயமும் கிடையாததால் தள்ளுபடி செய்தார்கள். ஒரு தேவையற்ற விளம்பத்திற்காகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் தான் அது இருந்தது.

மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வழங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட சென்னை- பெங்களூரு அதிவிரைவு திட்டம் கூட இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. உத்திரப் பிரதேசத்தில் 10 எக்ஸ்பிரஸ் சாலைகள் அறிவித்துள்ளது மோடி அரசு. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு எக்ஸ்பிரஸ் சாலை கூட கிடையாது. ஏற்கனவே தமிழ்நாட்டிற்காக அறிவிக்கப்பட்ட ரயில் திட்டங்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு 7 ஆண்டு காலம் ஆகிறது. இன்னும் கட்டிடம் கூட கட்டப்படவில்லை. ஒரு துரும்பு அளவிற்கு கூட தமிழகத்திற்காக மத்திய பாஜக அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை. ஆனால் இன்று உண்மைக்கு புறம்பாக, பொய்யான செய்திகளை உள்த்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். இது மிகவும் தவறான செயல்.

பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மூப்பனார் அவர்கள் பிரதமராக வருவதை திராவிட முன்னேற்றக் கழகம் தடுத்தது என்று உள்த்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது அப்பட்டமான பொய். தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெறும் என உள்த்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் அதற்கு இடமில்லை. முதலில் தமிழ்நாட்டு மக்களுக்காக ஏதாவது செய்துவிட்டு வாக்கு கேளுங்கள்.

தலைவர் ராகுல் காந்தி அளவுக்கு பெருமையாக, நிதானமாக, பொறுமையாக, கருத்துக்களோடு பேசக்கூடிய வேற்றொரு தலைவர் இல்லை. திரு ராகுல் காந்தி அவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறும்போது மோடியின் செயல்பாடுகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கிறாரே தவிர, ஒருபோதும் இந்தியாவை விமர்சித்து பேசியதே இல்லை.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் முன்னணி வீரராக தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். தமிழ்நாடு ஒரு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. திரு ஸ்டாலின் அவர்கள் பாஜகவை கடுமையாக எதிர்ப்பதனால், அவரை தமிழ் மண்ணில் இருந்து, முதலமைச்சர் பொறுப்பில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக உள்த்துறை அமைச்சர் அமித்ஷா உண்மைக்கு புறம்பாக, பொய்யான செய்திகளை சொல்கிறார் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

1 hour ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

3 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

4 hours ago