அறிவியல்

Aditya L-1: தொடரும் இஸ்ரோவின் சாதனை பயணம்.! இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1

Published by
மணிகண்டன்

இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை உருவாக்கி, விண்ணில் செலுத்தவுள்ளனர்

அதன்படி, ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளனர். தற்போது, விண்கலத்தை செலுத்துவதற்கான 24 மணிநேர கவுன்ட் டவுன் நடைபெற்று வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அனுப்ப விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

ஆதித்யா எல்-1 விண்கலமானது சூரியனை நோக்கி ஏவப்பட்டவுடன், பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் (15 லட்சம் கி.மீ) தொலைவில் இருக்கும், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) வைக்கப்படும். இந்த விண்கலத்தை எல்-1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் (Halo Orbit) வைப்பதால், சூரியனை எந்த ஒரு கிரகண மறைவும் இல்லாமல் தொடர்ந்து ஆய்வு செய்து தகவல்களை அனுப்ப முடியும்.

ஆதித்யா எல்-1 விண்கலம், மின்காந்த மற்றும் துகள் மற்றும் காந்தப்புல கண்டுபிடிப்பான்களைப் பயன்படுத்தி, ஃபோட்டோஸ்பியர் எனப்படும் சூரியனின் ஒளிரும் மேற்பரப்பு, குரோமோஸ்பியர் எனப்படும் நடுத்தர மேற்பரப்பு மற்றும் மெல்லிய வெப்ப வாயுக்களால் உருவான சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கு எனப்படும் கரோனா ஆகியவற்றைக் ஆய்வு செய்ய ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது.

இந்த எல்-1 புள்ளியில் வைக்கப்படும் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் இருக்கும் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கின்றன, மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ரேஞ்ச் புள்ளி எல்-1 -ஐ சுற்றி இருக்கக்கூடிய துகள்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றன.

ரிமோட் சென்சிங் பேலோடுகள்:

விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC) என்பது சூரியனின் கரோனா அடுக்கு மற்றும் கரோனாவிலிருந்து சூரியக் காற்றில் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலத்தின் வெளியீடுகளைப் பற்றி ஆய்வு செய்கிறது. இது ஒவ்வொரு நாளும் சூரியனின் 1,440 படங்களை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் என்று கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம் இந்த பேலோடை உருவாக்கியுள்ளது.

சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) ஆனது, சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதா (UV) கதிர்களின் உமிழ்வுகளை ஆய்வு செய்து, கரோனா மற்றும் மற்றும் குரோமோஸ்பியரை புற ஊதா உமிழ்வுக்கு அருகில் படம்பிடித்து, புற ஊதா கதிர்வீச்சு மாறுபாடுகளை அளவிடுகிறது. புனேவில் உள்ள வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பேலோட் உருவாக்கப்பட்டுள்ளது.

சோலார் லோ எனர்ஜி எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (SoLEXS) மற்றும் ஹை எனர்ஜி எல்1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (HEL1OS) ஆகியவை சூரியனிலிருந்து எக்ஸ்-ரே கதிர்களை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பேலோடுகளும் பெங்களூரில் உள்ள யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்-சிட்டு பேலோடுகள்:

ஆதித்யா சோலார் விண்ட் பார்ட்டிகள் எக்ஸ்பெரிமெண்ட் (ASPEX) மற்றும் ஆதித்யாவிற்கான பிளாஸ்மா அனலைசர் தொகுப்பு (PAPA) ஆகியவை சூரிய காற்று மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் அவற்றின் ஆற்றல் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன.

ASPEX ஆனது அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. PAPA ஆனது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

மேக்னடோமீட்டர் பேலோட் ஆனது எல்-1 புள்ளியில் இருக்கும் இரண்டு கிரகங்களுக்கு இடையேயான காந்தப்புலங்களை அளவிடும் திறன் கொண்டது. இது பெங்களூருவில் உள்ள எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம்களுக்கான ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

11 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

12 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

12 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

13 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

14 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

14 hours ago