Aditya-L1 Mission: ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தம்..! இஸ்ரோ அறிவிப்பு.!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை சரியாக 11.50 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது. ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது, 2,298 கி.மீ உயரத்தில் இருந்து ஆதித்யா-எல்1 விண்கலம் தனித்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து கூறிய இஸ்ரோ, ” PSLV-C57 மூலம் ஆதித்யா-எல்1 ஏவுதல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. பிஎஸ்எல்வி ராக்கெட் செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வகம் சூரியன்-பூமி L1 புள்ளி இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
PSLV-C57/Aditya-L1 Mission:
The launch of Aditya-L1 by PSLV-C57 is accomplished successfully.
The vehicle has placed the satellite precisely into its intended orbit.
India’s first solar observatory has begun its journey to the destination of Sun-Earth L1 point.
— ISRO (@isro) September 2, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
July 18, 2025
“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
July 18, 2025
ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!
July 18, 2025