5 மணி நேரமாக நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டம் – சாம்பியன் பட்டத்தை வென்ற நடால்!

Published by
பாலா கலியமூர்த்தி

உலக டென்னிஸ் தரவரிசையில் 5ம் நிலை வீரராக ரபேல் நடால் 21-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை எதிர்கொண்டார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால், மேட்டியோ பெரட்டினியைத் தோற்கடித்து ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்தார். இதில் நடால் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நடால் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்களில் வெற்றியைப் பதிவு செய்தார்.

இந்த நிலையில்,  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரஃபேல் நடால் – மெட்வெடேவ்(ரஷியா) இடையே போட்டி நடைபெற்றது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசையில் 2ம் நிலை வீரரான டேனில் மெட்வெடேவ்-ஐ  வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார். சுமார் 5 மணிநேரமாக நடந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தின் முதல் செட்டுகளில் கடும் பின்னடைவில் இருந்த ரபேல் நடால், அடுத்தடுத்த 3 சுற்றுகளிலும் தொடர்ந்து வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

அதன்படி, ரஃபேல் நடால் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெட்வடேவை வீழ்த்தினார். உலக டென்னிஸ் தரவரிசையில் 5ம் நிலை வீரராக உள்ள ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 35 வயதான ரபேல் நடால் 21-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.  நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரரை சாதனையை முறியடித்து 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் ஆடவர் டென்னிஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்தது. இந்த டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றியிருந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ரபேல் நடால் வென்றுள்ளார். கடும் பின்னடைவில் இருந்த நடால், அடுத்தடுத்து சுற்றுகளிலும் தொடர்ந்து வென்று சாம்பியன் படத்தை வென்றதால் ரசிகர்கள் கண்ணீருடன் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை அச்சுறுத்துகிறது” – முதல்வர் ஸ்டாலின் பதிவு.!

”தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை அச்சுறுத்துகிறது” – முதல்வர் ஸ்டாலின் பதிவு.!

சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…

38 minutes ago

”குரூப் 4 தேர்வுரூப் 4 க்கான வினாத்தாள் கசியவில்லை” – டிஎன்பிஎஸ்சி விளக்கம்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…

51 minutes ago

”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!

சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…

1 hour ago

”என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருந்தது” – ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு.!

விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…

2 hours ago

Fact Check: பாடகி ஆஷா போஸ்லே மரணம்.? மகன் கூறிய உண்மை தகவல்.!

டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago