குண்டு எறிதலில் சாதனை.! ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கம்.!

Published by
மணிகண்டன்

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சோவ் நகரில் தொடங்கி, இன்று 8 வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று காலையிலேயே இந்தியா பதக்க வேட்டையுடன் துவங்கியது. காலையில், கோல்ப் விளையாட்டில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட அதிதி அசோக் வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். கோல்ப் விளையாட்டில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை அதிதி அசோக் ஆவார்.

அதனை அடுத்து ஆண்கள் துப்பாக்கி சுடுதல் ட்ராப்50 விளையாட்டு பிரிவில்,  இந்திய வீரர்கள் கினான் டேரியஸ் சென்னாய், ஜோரவர் சிங் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர். பெண்கள் ட்ராப் டீம் பிரிவில் ராஜேஸ்வரி குமாரி, மனிஷா கீர் மற்றும் ப்ரீத்தி ரஜக் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

இதனை அடுத்து, தடைதாண்டுதல் (Steeplechase) [போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட அவினாஷ் சேபிள் 8:19:53 நிமிடத்தில் தடை தாண்டி, முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட தஜிந்தர் பால் சிங் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இவர் 20.36 மீ தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் தற்போது வரை இந்திய அணி 13 தங்கப்பதக்கங்கள், 18 வெள்ளி பதக்கங்கள், 17 வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக 48 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

7 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

7 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

9 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

10 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

10 hours ago