Air Rifle india Team [FILE IMAGE]
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். சீனாவில் தொடங்கியுள்ள 19வது ஆசிய விளையாட்டு போட்டி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.
45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றன. ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் விளையாட்டில் திவ்யான்ஷ் சிங், பிரதாப் சிங் தோமர், பாலாசாகேப் பாட்டீல் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது. அத்துடன் 1893.7 புள்ளிகளை எடுத்த புதிய உலக சாதனையை ஒன்றையும் படைத்துள்ளது.
அது மட்டும் இல்லாமல், தங்கப்பதக்கத்தை தொடர்ந்து இன்று மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. நான்கு நபர் கொண்ட துடுப்பு படகுப் போட்டியில் ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனித்குமார், ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்று இந்திய அணி 6ஆவது இடத்தில் உள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…