Air Rifle india Team [FILE IMAGE]
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். சீனாவில் தொடங்கியுள்ள 19வது ஆசிய விளையாட்டு போட்டி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.
45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றன. ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் விளையாட்டில் திவ்யான்ஷ் சிங், பிரதாப் சிங் தோமர், பாலாசாகேப் பாட்டீல் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது. அத்துடன் 1893.7 புள்ளிகளை எடுத்த புதிய உலக சாதனையை ஒன்றையும் படைத்துள்ளது.
அது மட்டும் இல்லாமல், தங்கப்பதக்கத்தை தொடர்ந்து இன்று மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. நான்கு நபர் கொண்ட துடுப்பு படகுப் போட்டியில் ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனித்குமார், ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்று இந்திய அணி 6ஆவது இடத்தில் உள்ளது.
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…