[image source:x@toisports]
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு ஆண்கள் கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஈரான் அணிகள் இடையேயான இறுதி போட்டி நடைபெற்றது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அந்தவகையில், விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஈரான் அணியை 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதனிடையே, இப்போட்டியின் போது நடுவர்களின் தீர்ப்புக்கு எதிராக வீரர்கள் வாதிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. சுமார் அரை மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்ட பின் மீண்டும் தொடங்கிய போட்டியில் இந்திய அணி, பலவாய்ந்த ஈரானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம், இந்நதிய அணி கபடி போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் தங்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இது 28-ஆவது தங்க பத்தகமாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 28 தங்கம், 36 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 105 பதக்கங்களை பெற்று 4வது இடத்தில் உள்ளது.
திருவள்ளூர் : மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் (23) என்ற இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாஸ்ரீ (21) என்ற…
சென்னை : கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…
இஸ்ரேல் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல்…
டெல்லி : வாட்ஸ் அப் பயன்பாட்டில் உள்ள "சேனல்கள்" (Channels) என்ற அம்சத்தில் மெட்டா நிறுவனம் புதிதாக ஒரு சந்தா…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…