Asian Squash [Image Source : Twitter/@JUABVP]
ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியானது, சீனாவில் உள்ள ஹுவாங்சோவில் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கால், ஹரிந்தர்பால் சிங் ஜோடி மலேசியாவின் சியாபிக் கமால் மற்றும் ஐஃபா அஸ்மான் ஜோடியை வீழ்த்தியது.
மற்றொரு அரையிறுதியில் மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட், இவான் யுவன் ஜோடி இந்திய அணி சார்பில் விளையாடிய இரண்டாவது அணியை வென்றது. இதனால் இந்தியாவின் அனாஹத் சிங் மற்றும் அபய் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை பெற்றது.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் தீபிகா பல்லிக்கால், ஹரிந்தர்பால் சிங் ஜோடி மற்றும் மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட், இவான் யுவன் ஜோடி இன்று மோதியது. இதில் தரநிலையில் 2 வது இடத்தில் உள்ள மலேசியா அணியை இந்திய அணி 11-10, 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.
இதன்மூலம் இந்திய இணை முதல் ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. இதில் சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிக்கால் மற்றும் ஹரிந்தர்பால் ஆகிய இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…