Asian Games 2023 Shooting [File Image]
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்.8 வரை நடைபெறுகிறது.
கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 29) வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியான துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங், பாலக், திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
மூவரும் 1731 புள்ளிகளுடன் முடித்தனர். ஈஷா 579 புள்ளிகளுடன் முடிக்க, அதன் பின்னரே பாலக் 577 புள்ளிகளைப் பெற்றார். மறுபுறம், திவ்யா 575 புள்ளிகளுடன் 10-வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறினார்.
தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈஷா சிங் பெற்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக, பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதற்கு முன், குழு போட்டியில் மனு பாக்கர் மற்றும் ரிதம் சங்வானுடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற என்ற சாதனையை இந்திய அணி முறியடித்தது. 2006ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 14 பதக்கங்களை வென்றது. ஆடவருக்கான 5 ரைபிள் 3 பொசிஷன்ஸ் தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…