Esha Singh [Image source : X/@ddsportschannel]
இந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி எண்ணற்ற பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அதன்படி, 18 வயதான ஈஷா சிங் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் 34 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் வெள்ளிப் பதக்கத்தில் ஒன்று கூடியுள்ளது. சீனாவின் ரூய் 38 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். கொரியாவின் யாங் ஜியின் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
அதோடு, இந்தியாவின் மனு பார்கர் 5 வது இடத்தில் உள்ளார். இதற்கு முன்னதாக 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவை சேர்ந்த மனு பார்கர், ஈஷா சிங், ரிதிம் சங்வான் ஆகியோர் அடங்கிய துப்பாக்கி சுடுதல் அணி 1,759 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
மேலும், இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 21 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. அதேபோல, சீனா 65 தங்கம், 35 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்களுடன் 114 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…