AsianGames2023: ஸ்குவாஷ் இறுதிப் போட்டி..! பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா.!

Published by
செந்தில்குமார்

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் இறுதி போட்டியில், இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இதன் மூலம் 7வது நாளாகத் தொடரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்கத்தில் மேலும் ஒரு தங்கத்தை சேர்ந்துள்ளது.

இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் குழு ஸ்குவாஷ் பிரிவில் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இதனால் இந்திய வீரர்கள் சவுரவ் கோஷல், அபய் சிங் இணை தங்கப்பதக்கம் வென்றனர்.

இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 10வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வென்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இந்திய ஸ்குவாஷ் வீரர்கள் அடுத்ததாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் விளையாட உள்ளனர்

தற்போது வரை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 36 பதக்கங்களை பெற்று இந்திய அணி பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதன்படி, இந்தியா இதுவரை நடந்த போட்டிகளில் 10 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது. சீனா 108 தங்கம், 66 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என 207 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதேபோல, ஜப்பான் 28 தங்கம், 37 வெள்ளி மற்றும் 38 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கொரியா 27 தங்கம், 28 வெள்ளி மற்றும் 53 வெண்கலம் என 108 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது

Published by
செந்தில்குமார்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

6 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

7 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

7 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

8 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

8 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

9 hours ago