AsianGames2023: ஸ்குவாஷ் இறுதிப் போட்டி..! பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா.!

Published by
செந்தில்குமார்

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் இறுதி போட்டியில், இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இதன் மூலம் 7வது நாளாகத் தொடரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்கத்தில் மேலும் ஒரு தங்கத்தை சேர்ந்துள்ளது.

இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் குழு ஸ்குவாஷ் பிரிவில் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இதனால் இந்திய வீரர்கள் சவுரவ் கோஷல், அபய் சிங் இணை தங்கப்பதக்கம் வென்றனர்.

இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 10வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வென்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இந்திய ஸ்குவாஷ் வீரர்கள் அடுத்ததாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் விளையாட உள்ளனர்

தற்போது வரை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 36 பதக்கங்களை பெற்று இந்திய அணி பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதன்படி, இந்தியா இதுவரை நடந்த போட்டிகளில் 10 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது. சீனா 108 தங்கம், 66 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என 207 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதேபோல, ஜப்பான் 28 தங்கம், 37 வெள்ளி மற்றும் 38 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கொரியா 27 தங்கம், 28 வெள்ளி மற்றும் 53 வெண்கலம் என 108 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது

Published by
செந்தில்குமார்

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 minutes ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

56 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

1 hour ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

3 hours ago