இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர்.இந்த இரு அணிகளும் முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி சிட்னியில் உள்ள வடக்கு சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்து உள்ளது.
அதன் படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி விக்கெட்டை வரிசையாக பறிகொடுத்தது. 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் எடுத்தனர்.அதில் அதிகபட்சமாக சசிகலா 19 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் எல்லிஸ் பெர்ரி 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
85 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 87 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதில் எரின் பர்ன்ஸ் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.கடைசி போட்டி வருகின்ற 02 -ம் தேதி நடைபெற உள்ளது.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…