டெல்லி : டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவை, சர்வதேச ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து நீக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரோஹித் ஷர்மாவின் பார்ம் மற்றும் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பி.சி.சி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. வரவிருக்கும் 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றங்களைச் செய்ய பிசிசிஐ விரும்புகிறது, இதனால் ரோஹித்துக்குப் பதிலாக ஒரு இளம் வீரரிடம் கேப்டன் பதவியை ஒப்படைக்க உள்ளதாம். ரோஹித் […]
டெல்லி : கிரிக்கெட்டில் மதிப்புமிக்க வீரராக கௌரவிக்கப்படும் ஐசிசி-ன் ‘Hall of Fame’ பட்டியலில் எம்.எஸ் தோனி இடம்பெற்றார். நேற்றைய தினம் லண்டனில் நடந்த விழாவில், இந்திய உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எம்எஸ் தோனி ICC ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். இப்பொழுது, Hall of Fame- இடம்பெற்ற தோனிக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. டி20 உலக கோப்பை, ODI உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற அவரின் சிறந்த கேப்டன்சி […]
மேற்கிந்திய தீவு : வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பூரன், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவின் மூலம் அவர் இந்த தகவலை தெரிவித்து கொண்டார். 29 வயதிலேயே ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் நிறைய யோசித்த பிறகு இந்த […]
டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2006-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். 3 டெஸ்டில் 7 விக்கெட்களும், 25 ODI-ல் 32 விக்கெட்களும், 7 டி20-ல் 4 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். . பியூஷ் சாவ்லா இதுவரை நான்கு அணிகளுக்காக (PBKS, KKR, CSK மற்றும் MI) […]
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை இணைக்க அணி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை பிசிசிஐ ஒரு வார கால இடைநீக்கத்தை அறிவித்த பிறகு, ஐபிஎல் 2025 மே 17 அன்று மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் ‘கிங்’ கோலி என அழைக்கப்படும் இவர் ஏற்கனவே தனது சர்வதேச டி20 கிரிக்கெட் பயணத்தை முடித்து கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். அடுத்ததாக தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தையும் முடித்துக்கொள்ள விராட் முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இது தொடர்பாக ESPN செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்ள விருப்பம் […]
டெல்லி : கடந்த மார்ச் 24 -ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸுக்கு எதிராக பேட்டிங் செய்தபோது, 65 ரன்களுக்கு அரை அணி அவுட் ஆன பிறகு அணி கடும் சிக்கலில் இருந்தது. அணியைப் பொறுத்தவரை 210 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்ட வேண்டியிருந்தது. அப்போது அசுதோஷ் சர்மா 31 பந்துகளில் அபாரமாக 66 ரன்கள் எடுத்து, தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்த அதிரடி […]
விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 65/5 என்ற நிலையில் பரிதவித்த டெல்லி […]
டெல்லி : 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்டை இந்த முறை 2025 -ஆம் ஆண்டுகான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 27 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்தது. எனவே, அவருடைய பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீதும் அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் போட்டி லக்னோ அணி டெல்லி அணிக்கு எதிராக தான் மார்ச் 23 -ஆம் தேதி விளையாடியது. இந்த போட்டியில் லக்னோ அணி […]
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 4-வது போட்டி மார்ச் 25-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி தான் தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது. டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே அசுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டம் தான் என்று சொல்லலாம். ஏனென்றால், லக்னோ வைத்த 210 என்ற இலக்கை துரத்தி கொண்டிருந்த […]
ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே நடைபெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தால், லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி வெற்றி பெற 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது லக்னோ அணி. […]
விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அந்த அணியில் மார்ஷ்(72), பூரன்(75) ஆகியோர் அதிரடியாக விளையாடி டெல்லி அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டனர். தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ்(36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 72 அடித்து முகேஷ் குமாரால் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவருடன் […]
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 சீசனின் 4வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. புது கேப்டன்களுடன் மோதி வரும் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணி பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் அதிரடி காட்டி வந்த லக்னோ ஆட்டத்தின் பாதியில் அணியில் அடுத்தடுத்த விக்கெட்கள் சரிய தொடங்கியது. தொடர்ச்சியாக ரன்கள் எடுத்த பிறகு லக்னோவை, டெல்லி கேபிடல்ஸ் […]
விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில் களமிறங்கவே இல்லை. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த சீசனில் புது கேப்டன்களுடன் இந்த 2 அணிகளும் மோதுகிறது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும், லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீசி வருகிறது. ஆனால், பிளேயிங் பிளேயிங் […]
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது, மாலை 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இப்பொது டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் இந்த இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் […]
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு சிலர் இந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் அந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் எனவும் பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், மொத்தமாக சமூக வலைத்தளங்களில் எந்த அணிக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிகம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் […]
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் முன் பதிவு கடந்த மார்ச் 19-ஆம் தேதி காலை தொடங்கிய நிலையில், விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. டிக்கெட்டின் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போதிலும் வேகமாக டிக்கெட்கள் விற்பனை ஆனது. […]
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், மார்ச் 23இல் மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் போட்டி முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்கேற்ப சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது. […]
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 இன் மூன்றாவது போட்டி நேற்றைய தினம் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டு இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 241 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 242 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா கிட்டத்தட்ட அரையிறுதிக்கு வந்து விட்டது. இப்போது அது […]