ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பண்ட் செய்த ஒரு தவறான செயலுக்காக அவருக்கு சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ICC) தண்டனை வழங்கி உள்ளது.

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான பேட்டிங் இருந்தபோதிலும், துணை கேப்டன் ஐசிசியால் கண்டிக்கப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
2வது இன்னிங்சில் பென் டக்கெட் 149 ரன்கள் விளாச, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், லீட்ஸில் நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தின்போது, இந்தியா Defend செய்து கொண்டிருக்கையில், பந்தின் தன்மை மாறியதாகக் கூறி அதனை மாற்றுமாறு நடுவரிடம் ரிஷப் பண்ட் கோரினார். சோதனைக்குப் பிறகு பந்தை மாற்றத் தேவையில்லை என நடுவர் கூறினார்.
அதாவது, 61வது ஓவரின் கடைசி பந்துகளில் பந்தை நடுவர் பால் ரீஃபலுடன் பந்தை மாற்றக் கோரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பன்ட், கோபத்தில் பந்தை தரையில் வீசினார். இதனால் விதிகளை மீறியதாக ஐசிசி அவரைக் கண்டித்துள்ளது. அதோடு, 1 தகுதி இழப்பு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காட்டுவது தொடர்பான ஐ.சி.சி., வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்களுக்கான ஐ.சி.சி. நடத்தை விதிகளின் பிரிவு 2.8ஐ ரிஷப் பண்ட் மீறியதாக ஐ.சி.சி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இருப்பினும், பந்த் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் எந்த ஒழுங்கு விசாரணையும் நடைபெறவில்லை.
கடந்த 24 மாதங்களில் பண்ட் செய்த முதல் தவறு இதுவாகும், எனவே அவரது ஒழுக்காற்று பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், லெவல் 1 மீறலுக்கான குறைந்தபட்ச தண்டனை, அதிகபட்ச அபராதமாக வீரரின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.