தோள்களில் தூக்கிச் சென்றதற்கு விருது.! தருணத்தை பகிர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • பெர்லினில் நடைபெற்ற விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த தருணம் என்ற தலைப்பின் கீழ் லாரியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா பெர்லினில் நடைபெற்றது. இதில் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த தருணம் என்ற தலைப்பின் கீழ் லாரியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.தோனி தலைமையில் 2011 உலகக்கோப்பையை வென்றபோது தன் கடைசி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றதற்காக கோப்பையை வென்ற இந்திய அணியின் சக வீரர்கள் சச்சினை தோளில் தூக்கிகொண்டு மைதானம் முழுக்க சுற்றிய போது மொத்த மைதானமும் சச்சின், என முழுக்கமிட்டனர். இந்நிலையில், தோள்களில் தூக்கிச் சென்ற சிறந்த தருணத்தை வைத்தே சச்சின் இந்த லாரியஸ் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். இந்த விருதுப் பட்டியலில் இருந்த 20 பேரில் பொதுமக்கள் சச்சினுக்கு அதிகளவில் வாக்களித்திருந்தனர்.

மேலும் கால்பந்து வீரர் மெஸ்சி, கார்பந்தய வீரர் ஹாமில்டன் ஆகியோருக்கும் இதே விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதை பெற்ற சச்சின் பேசுகையில், உலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது அது ரொம்ப கடினம். வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன இருக்க முடியும் என்றும், மிகவும் அரிதாகவே நாடே ஒன்றைக் கொண்டாடுகிறது என்றால் அது வியக்கத்தக்க தருணம் என்று தெரிவித்தார். இதையடுத்து  விளையாட்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நினைவுபடுத்திக்கிறது. இது நம் வாழ்க்கையில் என்ன மாதிரியான மேஜிக்கை நிகழ்த்தி விடுகிறது என்றும், இப்போது கூட அதைப்பார்த்தால் அந்தத் தருணம் மீண்டும் நான் வாழும் தருணமாகவே உள்ளது என நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

15 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

21 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

22 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

24 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago