உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடருக்கு ஒப்புதல் அளித்த பிசிசிஐ..!

Published by
murugan

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை 2024க்கு முன், முத்தரப்பு தொடரில் பங்கேற்க பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்த முத்தரப்பு தொடர் நடக்கிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள 4 மைதானங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் முத்தரப்பு தொடரும் தென்னாப்பிரிக்காவில் மட்டும் நடைபெற உள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன் இந்த முத்தரப்பு தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். முன்னதாக இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா பங்கேற்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், இன்று 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் இந்த முத்தரப்பு தொடரில் பங்கேற்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த முத்தரப்பு தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா டிசம்பர் 29-ம் தேதி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த தொடரின் 2-வது போட்டியை இந்தியா ஜனவரி 2-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.ஜனவரி 4 மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து நான்காவது போட்டி ஜனவரி 6-ம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

அதேநேரம், இந்த முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனைத்து அணிகளும் தங்களுக்குள் 2-2 போட்டிகளில் விளையாட வேண்டும். இந்த முத்தரப்பு தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் உதய் சஹாரன் கேப்டனாகவும்,  துணை கேப்டன் பொறுப்பு சௌம்ய குமார் பாண்டேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 19 முதல் உலகக்கோப்பை:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை ஜனவரி 20-ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பை சுமார் 22 நாட்கள் நடைபெற உள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி:
அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், ஆராத்யா சுக்லா, பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், ஆரவெல்லி அவ்னிஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), சௌம்யா குமார் பாண்டே (துணை கேப்டன்), உதய் சஹாரன் (கேப்டன்), முருகன் அபிஷேக், இன்ஷ் மகாஜன் (விக்கெட் கீப்பர்), தனுஷ் கவுடா, ராஜ் லிம்பானி மற்றும் நமன் திவாரி

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

1 hour ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

1 hour ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

3 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago