லண்டனில் முன்னாள் உலக குத்துச்சண்டை வீரராகிய அமீர்கானுக்கு துப்பாக்கியை காண்பித்து அவரிடமிருந்து விலைமதிப்புள்ள வாட்ச் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 35 வயதுடைய அமீர்கான் தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார்.
அப்போது திடீரென காரிலிருந்து 2 மர்ம நபர்கள் வெளியே வந்து அமீர்கானை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது கையிலிருந்த 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்சை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது மனைவியுடன் சாலையை கடந்து கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக அவள் எனக்கு சில அடிகள் தள்ளி இருந்தாள். அப்போது திடீரென இரண்டு பேர் என்னிடம் ஓடி வந்து எனது முகத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி, எனது வாட்சை பறித்து சென்றார்கள். நல்லவேளை நானும் எனது மனைவியும் பாதுகாப்பாக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அமீர்கானின் மனைவி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் நடந்த போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை பதிந்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…