மறக்கமுடியுமா.! ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
  • இப்போட்டியில் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமை அடைந்தார்.

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நடக்க கூடாது என்று சில இந்து அமைப்புகள் மைதானத்தை சேதம் படுத்தினர். ஆனால் கடுமையான முயற்சிக்கு பின்பு மைதானத்தை சரிசெய்து போட்டி நடைபெற்றது.  இந்தப் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடியது. இதனையடுத்து 2-வது இன்னிங்சில் 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது. இந்த பெரிய இலக்கை எட்டமுடியாது என்றும், விக்கெட்டை விடாமல் போட்டியை சமன் செய்திடலாம் என்று பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது.

இதைத்தொடர்ந்து அனில் கும்ப்ளே அபாரமாக பந்து வீச தொடங்கியதும், பாகிஸ்தானின் நிலைதடுமாறியது. பின்னர் கிடுகிடுவென விக்கெட்டுகள் சரியாய் தொடங்கியது. போட்டி இறுதியில் பாகிஸ்தான் அணி 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் அனில் கும்ப்ளே 26.3 ஓவர்கள் வீசி, அதில் 9 ஓவர்கள் மெய்டன் செய்து, 74 ரன்களை மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்த இரண்டாவது வீரர் அனில் கும்ப்ளே ஆவர். இதற்கு முன் இங்கிலாந்து ஜிம் லேக்கர் என்ற வீரர் இந்த சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

12 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

13 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

14 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

14 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

16 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

16 hours ago