குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரு அவையிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஜனாதிபதி கோவிந்த் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து உள்ளார்.
இந்த சட்ட மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து உள்ளது.ஆனால் அசாமில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று கவுகாத்தியில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.இத்தகைய காரணங்களால் அசாம், திரிபுராவில் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெற இருந்த ராஞ்சி தொடருக்கான போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த போட்டிகள் வேறு மாநில மைதானங்களில் நடைபெறுமா? அல்லது அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்படுமா ?போன்ற விவரங்களை கிரிக்கெட் வாரியம் கூறவில்லை ஆனால் ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…