ஸ்டோனிஸ் போராட்டத்தால் குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு ..!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் போட்டியில் லக்னோ அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்து குஜராத் அணிக்கு

இன்று இரவு போட்டியாக லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதிக்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுலும், டிகாக்கும் களமிறங்கினார்கள்.

முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார், அவர் வீசிய 2-வது பந்தில் சிக்ஸ் அடித்த டிகாக் அடுத்த பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து படிக்களும் 7 ரன்களில் வெளியேற, லக்னோ அணி பவர்பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு களத்தில் கே.எல்.ராகுலும், மார்கஸ் ஸ்டோனிஸ்ஸும் பொறுமையாக அணியின் ஸ்கோரை உயரத்தினார்கள்.

அதன்படி இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதன் பிறகு பொறுமையாக விளையாடி கொண்டிருந்த கே.எல்.ராகுல் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களத்தில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த மார்கஸ் ஸ்டோனிஸ்ஸும் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பிறகு களத்தில் இருந்த நிக்கோலஸ் பூரனும், ஆயுஷ் படோனியும் களத்தில் இருந்து அதிரடி காட்ட தொடங்கினார்.  திடீரென அதிரடி காட்டிக்கொண்டிருந்த படோனி 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதி கட்டத்தில் பூரனும், குருனால் பாண்டியாவும் களத்தில் இருந்து கிடைக்கின்ற பந்தை பவுண்டரிகள் அடித்தனர்.

இறுதியில், லக்னோ அணி 20 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தார். குஜராத் அணியில்  அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் நல்கண்டே தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.

Published by
அகில் R

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

5 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

6 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

7 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

8 hours ago