கிரிக்கெட்டில் வெற்றி பெற 2 வழிகள்… வெற்றியின் ரகசியம் குறித்து ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை அணியின் அணுமுறை எனக்கு உந்துதலாக இருந்தது என்று குஜராத் அணியின் கேப்டன் ஓபன் டாக்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக பங்கேற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு, முதல் ஆண்டே சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். அதேபோன்று இந்தாண்டும் நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள குஜராத் அணி 10 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

குஜராத் அணியில் அந்த அளவு பெரிய வீரர்கள் இல்லையென்றாலும், இருக்கும் வீரர்கள் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். களத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டிய, அமைதியாக, பொறுமையாக, அதாவது தோனியை போன்று செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே தோனிதான் எனக்கு குரு என்று பல இடங்களில் கூறி வரும் பாண்டியா, அதனை நிரூபிக்கும் விதமாக செயல்பட்டு, வெற்றியும் கண்டு வருகிறார். இந்த சமயத்தில், ஜியோ சினிமாவிக்கு பேட்டியளித்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு 2 வழிகள் உள்ளது என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில், நம்பர் 1, மிகச்சிறப்பு வீரர்களை அணியில் எடுத்து வெற்றி பெறுவது, அதுதான் இந்தியன்ஸ் அணியின் வழி என்றார்.

நம்பர் 2, வீரர்கள் யாராக இருந்தாலும், வெற்றிக்கான சிறந்த சூழலை அணியில் உருவாக்கி, அந்த வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்பட செய்வது, சென்னை அணியின் வழி எனவும் கூறினார். சென்னை அணியின் அணுமுறை எனக்கு உந்துதலாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் எனக்கு ஒரு ஸ்பெஷல் டீம், அது எனது முதல் காதல் போல என்றார். இதுபோன்று, சென்னை அணியின் அணுமுறை எனக்கு உந்துதலாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், “மஹி பாய் (எம்எஸ் தோனி) என்னை மிகவும் பாதித்துள்ளார், குறிப்பாக அவரது விளையாட்டு விழிப்புணர்வு” என ராபின் உத்தப்பா உடனான பேட்டியில், வெற்றியின் ரகசியம் பற்றி பகிர்ந்துகொண்டார் குஜராத் அணியின் கேப்டனும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான ஹர்திக் பாண்டியா.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago