அதிரடி காட்டி சதம் விளாசிய ருதுராஜ்… ஆஸ்திரேலியாவிற்கு 223 ரன்கள் இலக்கு..!

Published by
murugan

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யா குமார் யாதவ், தொடக்க வீரர் ருதுராஜ் இருவரும் சரிவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்தனர்.

நிதானமாக விளையாடிய சூர்யா குமார் யாதவ் 29 பந்தில் 39 ரன்கள் அடித்தார். அதில் ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். ஆனாலும் தொடக்க வீர ருதுராஜ் சிறப்பாக விளையாடி 32 பந்தில் அரைசதம் விளாசினார். அடுத்த சில நிமிடங்களில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 57 பந்தில் 123* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். அதில் 13 பவுண்டரி, 7 சிக்ஸர் அடங்கும்.  மறுபுறம் விளையாடிய திலக் வர்மா 24 பந்தில் 31* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டைகளை இழந்து 222 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கேன் ரிச்சர்ட்சன் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆரோன் ஹார்டி தலா 1 விக்கெட்டை பறித்தனர். இந்த தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னியில் உள்ளது.

Published by
murugan

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

6 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

6 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

7 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

8 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

8 hours ago