அமெரிக்காவில் விராட் கோலியின் பிரம்மாண்ட சிலை..! வைரலாகும் வீடியோ.!

Published by
அகில் R

விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலியை பின்பற்றும் இளைஞர்கள் உலகம் முழுவதுமே உள்ளனர். இதனாலே கிரிக்கெட் ரசிகர்களால் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியே இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு விராட் கோலியின் ஒரு பிரமாண்டமான சிலை அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ளது.

அவர் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் சரிவர விளையாடும் இருக்கிறார். இதனால் பல விமர்சனங்களை அவர் சந்தித்தாலும், அவரது ரசிகர்கள் அவரை ஊக்குவித்துக் கொண்டே அவருக்கு பக்கபலமாகவே தான் இருக்கிறார்கள்.

தற்போது, விராட் கோலிக்கு அமெரிக்காவில் அமைந்துள்ள நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் (Times Square) என்ற இடத்தில் பிரமாண்ட சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது மனிதனை விட பல மடங்கு உயரமுள்ள ஒரு பிரம்மாண்ட சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் இந்த ப்ரமாண்ட சிலையை கட்டில், மெத்தை உற்பத்தி செய்யும் டுரோஃபிளேக்ஸ் (Duroflex) நிறுவனம் அமைத்துள்ளது.

அந்நிறுவனத்தின், பிராண்ட் அம்பாசிடர் விராட் கோலி என்பதால் அவரது சிலையை நிறுவனத் தயாரிப்புகளின் விளம்பரத்திற்காக நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும். டுரோஃபிளேக்ஸ் நிறுவி உள்ள அவரது ப்ரமாண்டமான இந்த சிலையின் புகைப்படங்களும், வீடியோவும் வைரலாக இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

Published by
அகில் R

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

12 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

13 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

14 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

14 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

15 hours ago