NRK [Image source : Twitter/@TNPremierLeague]
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய NRK vs SLST போட்டியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சேலம் அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டது. இதனால், டிஎல்எஸ் முறைப்படி நெல்லை அணியின் ஓவர்கள் 20-லிருந்து 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 129 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, நெல்லை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஸ்ரீ நெரஞ்சன் நிதானமாக விளையாட, அவருடன் களமிறங்கிய அருண் கார்த்திக் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார். நெரஞ்சன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அஜிதேஷ் அதிரடியாக விளையாடியும் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் சூர்யபிரகாஷ் அபாரமாக விளையாடி அணியை வெற்றி இலக்கை எட்ட வைத்தார். முடிவில், நெல்லை அணி 15.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக அஜிதேஷ் 39 ரன்களும், சூர்யபிரகாஷ் 33* ரன்களும் எடுத்துள்ளனர். சேலம் அணியில் அபிஷேக் தன்வார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…