அமித் மிஸ்ரா என்னிடம் சம்பளத்தை உயர்த்தி கேட்டார் – சேவாக்..!!

Published by
பால முருகன்

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அமித் மிஸ்ராவை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தனர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19. 1 ஓவர்களில் 138 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசியத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார். சிறப்பாக பந்து வீசியதால் அமித் மிஸ்ராவை பலர் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அமித் மிஸ்ராவை பாராட்டியுள்ளார்.

இது குறித்து வீரேந்திர சேவாக் கூறுகையில், ” இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். பவர் பிளேயில் ஓவர் போது மிஸ்ரா பதற்றமடைந்தார், கவர்கள் மீது பவுண்டரிகளுக்கு சூர்யகுமார் யாதவ் அடித்தார். ஆனால் பவர் பிளே முடிந்ததும், மிஸ்ரா வலுவாக திரும்பி வந்தார். அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார் அதற்காக எனது பாராட்டுகள் என்றும்,  கடந்த 2008 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் நான் கேப்டனாக விளையாடிய போது அமித் மிஸ்ரா தனது முதல் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். அதற்காக உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் மிஸ்ரா  தயவுசெய்து என் சம்பளத்தை அதிகரிக்கச் செய்யுங்கள் என்று கேட்டார். அதை நான் இப்பொது உணர்கிறேன்”

அமித் மிஸ்ரா மிகவும் அமைதியானவர். அனைவரிடமும் பாசமாக பேசுவார் அதானல் தான் டெல்லி அணிக்கு அவரை மிகவும் பிடித்துள்ளது. அவர் விக்கெட் எடுக்கும் போதெல்லாம், அணியின் வீரர்கள் அனைவரும் அவருக்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள். சென்னையிலும் இலக்கைத் துரத்த முடியும் என்று டெல்லி அணி காட்டியது” என்றும் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

52 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago