“நான் அதிகம் மனமுடைந்து போனேன்.. அறைக்கு செல்லமுடியவில்லை” ரஸல் உருக்கம்!

Published by
Surya

“எனது விக்கெட்டை இழந்ததும், அதிகமாக மனமுடைந்து போனேன், உணர்ச்சிவசப்பட்டேன். இதனால் என்னால் அறைக்குச் செல்ல முடியவில்லை” என்று படியில் அமர்ந்த காரணம் குறித்து ரஸல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில்நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 220 ரன்கள் எடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் தொடக்கத்திலே கொல்கத்தா அணி விக்கெட்களை இழந்து வந்த நிலையில், ரஸல் களமிறங்கினார். அவருடன் தினேஷ் கார்த்திக் இணைந்து அதிரடியாக ஆடிவந்தார். சென்னை அணி சார்பாக ஷர்துல் தாக்கூர், வைடு ஆஃப் ஸ்டம்பை நோக்கி வீசினார். இதனால் ரஸல், அடுத்து வரக்கூடிய பந்துகள் அவ்வாறு வரும் என்று எண்ணி ஆட ஆரமித்தார்.

அவரையடுத்து சாம் கரண் பந்துவீச, ஆஃப் சைடில் பீல்டிங் செட் செய்தார். வைடு ஆஃப் ஸ்டம்பில்தான் பந்து வீசுவார் என்று ரஸல் எண்ணிய நிலையில், ஆஃப் சைடில் ஒதுங்கி நின்று அந்த பந்தை ஆட முயற்சித்தார். ஆனால் பந்து, லெக் ஸ்டம்புக்கு நேராக வந்தது. அதனை தவறாக வைடு என நினைத்து பந்தை விட்டார். அது நேரடியாக ஸ்டம்ப்பில் பட்டு, போல்ட் ஆகி ரஸல் வெளியேறினார். அவுட் ஆன விரத்தியில் ரஸல் பெவிலியன்க்கு செல்லும் படிக்கட்டில் உட்காந்தார்.

அவர் களத்தில் நின்று விளையாடினால் நிச்சியம் கொல்கத்தா அணி அந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்கும். அவர் படியில் அமர்ந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இதர கிரிக்கெட் வீரர்கள் வருத்தமடைந்தனர். இந்நிலையில், படிக்கட்டில் அமர்ந்த காரணம் குறித்து ரஸல் மனம்திறந்து பேசியுள்ளார்.

அப்பொழுது, “எனது விக்கெட்டை இழந்ததும், அதிகமாக உணர்ச்சிவசப்பட்டேன். என்னால் அறைக்குச் செல்ல முடியவில்லை. அப்படி ஒரு பந்தை தவற விட்டு அவுட்டாகியதால், எனது அணியின் சக வீரர்களையும் என்னால் பார்க்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் நான் எனது அணியை வெற்றிப்பெற செய்திருக்க வேண்டும். ஆனால் நான் எனது வேலையை சரியாக முடிக்கவில்லை. இதனால் நான் அதிகம் மனமுடைந்து போனேன்.

ஆயினும் நான் அதிக வலிமையுடன் இருந்தேன். இதுபோன்ற சூழ்நிலையில் நாம் அவுட்டானால், கோபம் தான் வரும். ஆனால் இந்த போட்டிக்கு பிறகு சற்று வித்தியாசமாக இருந்தேன். நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

23 minutes ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

53 minutes ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

1 hour ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

2 hours ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

2 hours ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

2 hours ago