கலக்கத்தில் ‘கிங்’ கோலி.! ஆறுதல் கூறி தேற்றிய காதல் மனைவி.!

Published by
செந்தில்குமார்

நடப்பு ஆண்டிற்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றதால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடினார்.

பின் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சுப்மன் கில் (4), ஸ்ரேயாஸ் ஐயர் (4), ஜடேஜா (9) என அடுத்தடுத்து அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். முந்தைய போட்டிகளைப் போலவே, இந்த போட்டியிலும் விராட் கோலி சதமடிப்பார் என்று எதிர்க்கப்பட்ட வேளையில், அவரும் 54 ரன்களில் வெளியேறினார். இதனால் மைதானம் முழுவதும் அமைதியானது.

ஒட்டுமொத்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா.? அள்ளிச்சென்ற ஆஸ்திரேலியா.!

இதையடுத்து, கே.எல்.ராகுல் மட்டுமே 66 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் பெரிதாக சோபிக்காமல் தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து 137 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மார்னஸ் லாபுசாக்னே அரைசதம் கடக்க, இறுதியில் 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை வென்று, 6வது முறையாக சாதனை படைத்தது. இதனால் வருத்தமடைந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினார்கள்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அணி வீரர்களும் கவலையில் கண்ணீர் விட்டனர். அவர்களுக்கு சக வீரர்கள் ஆறுதல் கூறினர். கேப்டன் ரோஹித் ஷர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி இருவர் கண்களிலும் கண்ணீர் வந்தது. இந்நிலையில், வருத்தமடைந்த விராட் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆறுதல் கூறினார்.

7-வது முறை கோப்பையை வென்ற நோவக் ஜோகோவிச்.!

வீரர்கள் அனைவரும் கவலையால் மைதானத்தை விட்டு வெளியேறியதும், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, அவருக்கு ஆறுதல் கூறிக் கட்டிப்பிடித்து அரவணைத்துக் கொண்டார். தற்போது அவர் அனுஷ்கா சர்மா ஆறுதல் கூறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

AnushkaSharma [Image Source : X/@ViratGang]

இதற்கிடையில், விராட் கோலி 2023 உலகக்கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அதன்படி, இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 11 போட்டிகளில் அதிகபட்சமாக 765 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

15 minutes ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

1 hour ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

2 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

3 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

5 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

6 hours ago