ஆஷஸ் தொடர்: நாளை அதிகாலை தொடங்கும் 3-வது போட்டி..!

Published by
murugan

ஆஷஸ் தொடரின் 3-வது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்துள்ளது. அதில், ஆஸ்திரேலியா அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 275 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், 3-வது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை மீண்டும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள ஆஸ்திரேலியாவும், கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்ற கூடாது என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணி விளையாட உள்ளனர்.

ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். ஹேசல்வுட் காயம் காரணமாக இந்த போட்டியிலும் விளையாடவில்லை. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், பிராட், ஒல்லிபோப் ஆகியோருக்கு பதிலாக பேர்ஸ்டோவ், ஜாக்லீச், மார்க்வுட் களமிறங்கவுள்ளனர்.

2019-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. 2017-18 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றதால் ஆஷஸ் கோப்பை அவர்களிடம் உள்ளது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும், 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.

Published by
murugan
Tags: Ashes2021

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

4 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

5 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

6 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

7 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

8 hours ago