ஆஷஸ் தொடரின் 3-வது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்துள்ளது. அதில், ஆஸ்திரேலியா அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 275 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், 3-வது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை மீண்டும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள ஆஸ்திரேலியாவும், கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்ற கூடாது என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணி விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். ஹேசல்வுட் காயம் காரணமாக இந்த போட்டியிலும் விளையாடவில்லை. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், பிராட், ஒல்லிபோப் ஆகியோருக்கு பதிலாக பேர்ஸ்டோவ், ஜாக்லீச், மார்க்வுட் களமிறங்கவுள்ளனர்.
2019-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. 2017-18 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றதால் ஆஷஸ் கோப்பை அவர்களிடம் உள்ளது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும், 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…