#Ashes2023: மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரரை குண்டுக் கட்டாக தூக்கி சென்ற இங்கிலாந்து வீரர்!

Published by
பாலா கலியமூர்த்தி

போட்டியின்போது மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரரை தூக்கி சென்ற இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை செய்தது. அதன்படி, முதலில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான  டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒரு அசாதாரண மற்றும் வினோதமான சம்பவம் லண்டனில் உள்ள லார்ட்ஸில் மைதானத்தில் நடந்துள்ளது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டு, பின்ன தொடங்கியது. அதாவது, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2வது போட்டியின்போது, ஆரஞ்சு நிற பவுடருடன் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்களில் ஒருவரை, இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

போட்டியின் முதல் ஓவர் முடிந்ததும், இரண்டு ‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ எதிர்ப்பாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்து ஆரஞ்சு பவுடரை வீசியுள்ளனர். பின்னர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ் எதிர்பாராளர்களில் ஒருவரை தனது தோளில் தூக்கிச் சென்று அப்புறப்படுத்திய நிலையில், மைதான ஊழியர்கள் மற்ற நபரை மைதானத்திலிருந்து வெளியேறினார். 5-10 நிமிட தாமதத்திற்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியதால் பேர்ஸ்டோவ் டிரஸ்ஸிங் அறைக்குச் சென்று தனது சட்டையை மாற்றிக் கொண்டு திரும்பினார்.

உகாண்டாவில் எண்ணெய் குழாய்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து “Just Stop Oil” என்ற அமைப்பு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. 3 பேரை போலீசார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர் என்று பெருநகர காவல்துறை கூறியுள்ளது. ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் எதிர்ப்பாளர்கள் இந்த ஆண்டு பிரிட்டனில் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இந்த மாதம் லண்டனில் நடந்த அயர்லாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவர்கள் இங்கிலாந்து அணி பேருந்தை சிறிது நேரம் நிறுத்தியுள்ளனர்.

மேலும், பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள், ட்விக்கன்ஹாமில் நடந்த பிரீமியர்ஷிப் ரக்பி இறுதிப் போட்டி மற்றும் ஷெஃபீல்டில் நடந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை குறிவைத்தனர். புதிய எரிபொருள் உரிமம் மற்றும் உற்பத்தியை பிரிட்டிஷ் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஜானி பேர்ஸ்டோவ் எதிர்பாராளர்களில் ஒருவரை தனது தோளில் தூக்கிச் சென்ற வீடியோ குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

5 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

7 hours ago