#Ashes23: ஜோ ரூட் அதிரடி சதம்..! இங்கிலாந்து அணி 393 ரன்களில் டிக்ளேர்..!

Published by
செந்தில்குமார்

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியிருக்கிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளார்.

இதன்படி, இங்கிலாந்து அணியில் முதலில் ஜாக் கிராலி, பென் டக்கெட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் பென் டக்கெட் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 31 ரன்களில் வெளியேறினார். ஆனால், சாக் கிராலி நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

அதன்பின், போலண்ட் வீசிய பந்தில் ஜாக் கிராலி ஆட்டமிழக்க, ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் நிதானாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். ஒருபுறம் ஹாரி புரூக் ஆட்டமிழக்க, ஜோ ரூட் அரைசதம் கடந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்ட்ரோக்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

அவரையடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ், 78 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பிறகு மொயின் அலி (18 ரன்கள்), ஸ்டூவர்ட் பிராட் (16 ரன்கள்) ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர். ஆனால், ஜோ ரூட் சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

தற்போது இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 78 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 118 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்களும், ஜாக் கிராலி 61 ரன்களும் குவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், நாதன் லியோன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்பொழுது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

6 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

8 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

9 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

9 hours ago