KL Rahul will not play the first two matches [File photo: AFP]
ஆசிய கோப்பை 2023 தொடர் நாளை பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதும் போட்டியுடன் தொடங்கும் நிலையில், செப்.2ம் தேதி இலங்கையில் பாகிஸ்தானை எதிர்கொள்ள தீவிர பயிற்சிக்கு பின் இந்திய அணி இலங்கைக்கு புறப்பட உள்ளது. இந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் விளையாட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், கே.எல்.ராகுலின் உடற்தகுதியில் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஆனால், ஆசிய கோப்பை தொடரின் இந்தியாவின் முதல் இரண்டு போட்டிகளான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிரான போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார். இதனிடையே, பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) இருக்கும் கேஎல் ராகுல், ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னதாக செப்டம்பர் 4-ஆம் தேதி மீண்டும் அவரது உடற்தகுதி குறித்து சோதனை நடத்தப்படும் என கூறியுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…