வார்னர் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா அணி, வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது.

நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், சூப்பர் 8 சுற்றின் 4-வது மற்றும் தொடரின் 44-வது போட்டியில் இன்று காலை ஆஸ்திரேலிய மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி வங்கதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தட்டு தடுமாறிய ரன்களை சேர்த்து. ஒரு கட்டத்தில் வங்கதேச அணியின் கேப்டன் சாண்டோ சற்று அதிரடி காட்டி 41 ரன்களுக்கு அட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பிறகு டவ்ஹித் ஹ்ரிடோய் ஒரு கேமியோ அதிரடியை காட்டி, நிலைத்து ஆடாமல் அவரும் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும், அவரை தொடர்ந்து எந்த வீரரும் பெரிய ரன்களை அடிக்கவில்லை, இதன் காரணமாக வங்கதேச அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அந்த 3 விக்கெட்டையும் அவர் ஹாட்ரிக் முறையில் கைப்பற்றி இருந்தார். அதன்பின், 141 என்ற எளிய இலக்கை எடுப்பதற்கு ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணி மிகச்சிறப்பாக விளையாடி வந்தது.

6 ஓவர்களிலேயே 60 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா அணி, தனது முதல் விக்கெட்டாக சிறப்பாக ஆடி வந்த டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான மிட்செல் மார்ஷ் ரன்களை எடுக்க தவறி 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவருக்கு பின் டேவிட் வார்னரும், க்ளென் மேக்ஸ்வெல்லும் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தனர். அதில் வார்னர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சரியாக 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 100 ரன்களில் விளையாடி கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டு போட்டியானது தடைபட்டது.

மேலும், 15 நிமிடங்களுக்கும் மேலாக மழை நீடித்ததால், அப்போது ஆஸ்திரேலியா அணி 11.2 ஓவர்களில் வங்கதேசத்தை விட 28 ரன்கள் முன்னிலையில் இருந்ததால், DLS விதிப்படி ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியை வெற்றி பெற்றது என அறிவித்தனர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 2-ம் பிடித்து இந்திய அணிக்கு அடுத்தபடியாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 minutes ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

12 minutes ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

19 minutes ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

1 hour ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

2 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago