ஆஸ்திரேலிய தொடர் தான் கடைசி டெஸ்ட் தொடர் … மனைவியிடம் கூறிய அஷ்வின்.!

Published by
Muthu Kumar

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தான் தனக்கு கடைசி தொடராக அமையலாம் என அஷ்வின் தன் மனைவியிடம் கூறியதாக பேட்டி.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலருமான ரவிச்சந்திரன் அஷ்வின், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விரைவில் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று அஞ்சியதாக கூறியுள்ளார்.

இது குறித்து  இந்தியன்  எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் நான் கடந்த 2022 டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கால் முட்டுப் பகுதியில் ஏற்பட்ட வலியின் காரணமாக எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஒரு முடிவு எடுக்க நேர்ந்தது என்று கூறினார்.

சில காலமாக கால் முட்டு பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டு வலியின் காரணமாக அஷ்வின் தனது பவுலிங் செய்கையில்(Action) ஆஸ்திரேலிய தொடரின்(2023) போது மாற்றம் செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக இருந்து வந்த தனது பவுலிங் செய்கையை, அஷ்வின் கால் முட்டு வலியின் காரணமாக மாற்ற நேரிட்டது.

மேலும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு நான் என் மனைவியிடமும் இது குறித்து கூறியிருந்தேன், வரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தனக்கு கடைசி தொடராக அமையலாம் என்று கூறியதாக அஸ்வின் தெரிவித்தார். எனக்கு முட்டியில் சில பிரச்சனைகள் இருக்கிறது, பந்துவீசும்போது அதிக அழுத்தம் முட்டியில் விழுவதினால் நான் எனது பவுலிங் செய்கையை சிறிது மாற்ற இருக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்.

Ash aus series [Image – TOI]

இந்த பௌலிங் செய்கையை மாற்றுவது குறித்து அஷ்வின் கூறும்போது, நான் கடந்த நான்காண்டுகளாக பந்து வீசி வந்த பவுலிங் ஆக்சனை திடீரென்று மாற்றுவது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் நான் தற்போது என்னுடைய பவுலிங் ஆக்சனை 2013-14 ஆம் ஆண்டுகளில், வீசியது போல மாற்றம் செய்யப் போவதாக அஷ்வின் தெரிவித்தார்.

Ash bowl Action [Image – BCCI]

மேலும் இந்த புது பௌலிங் செய்கையும் அஷ்வினை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை, அவர் வழக்கம்போல் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்கள்(25) வீழ்த்தினார். இது குறித்து அஷ்வின் கூறும் போது நான் என்னைப் பற்றி இந்த விஷயத்தில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும் பொழுது, நான் அதைப் பற்றி யோசிக்காமல் தைரியமாக ஒரு பந்துவீச்சாளராக இந்த சவாலை எதிர்கொண்டு இந்த கடின முடிவை எடுத்தேன். 36 வயதில் என்னால் பவுலிங் செய்கையில் மாற்றம் செய்து பந்து வீச முடியும் என்பதை விட மிகப்பெரிய சவால் என் வாழ்க்கையில் இருந்ததில்லை.

என்னால் பழைய பவுலிங் ஆக்ஷனில் பந்துவீசி அதில் 15, 16 விக்கெட்டுகள் எடுப்பது எளிது என்றாலும் அதில் எனக்கு திருப்தி ஏற்படுவதில்லை, அணிக்காக ஏதாவது புதிதாக செய்து கொண்டிருப்பதில் என்னை நான் எப்பொழுதும் தயார் படுத்திக் கொண்டே இருப்பேன் என்று அஷ்வின் மேலும் கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

27 minutes ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

43 minutes ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

2 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

3 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

4 hours ago