AUSvAFG : இப்ராஹிம் சத்ரான் அதிரடியான சதம்… ஆஸ்திரேலியாவுக்கு 292 ரன்கள் வெற்றி இலக்கு!

Published by
பாலா கலியமூர்த்தி

2023ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 38-வது லீக் போட்டியில் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். இதில், நட்சத்திர பேட்ஸ்மேன் குர்பாஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவரை தொடர்ந்து ரஹ்மத் ஷா 30, ஹஷ்மத்துல்லா ஷாஹித் 26 ரங்களின் அவுட்டாகி வெளியேறினர்.

“டைம்டு அவுட்” டிஸ்மிஸல் – ஆதாரங்களை பகிர்ந்து கேள்வி எழுப்பிய ஏஞ்சலோ மேத்யூஸ்!

ஒருபக்கம் அடுத்தடுத்து விக்கெட் விழுந்து வந்தாலும், மறுபக்கம் தொடக்க ஆட்டக்காரரான இப்ராஹிம் சத்ரான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயர்த்தி வந்தார். பின்னர், விக்கெட்டுகள் இழந்தாலும், சிறப்பாக விளையாடிய  இப்ராஹிம் சத்ரான் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதனிடையே, கடைசி கட்டடத்தில் களமிறங்கிய ரஷித் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 143 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த நிலையில், 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதி ரேஸில் இரண்டு அணிகளும் நீடிக்கும் நிலையில், இப்போட்டி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

23 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago