AUSvIND practise: முதல்முறையாக அரைசதம் விளாசிய பும்ரா!

Published by
Surya

ஆஸ்திரேலியாக்கு எதிரான இரண்டாம் பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா, 57 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 55 ரன்கள் எடுத்து தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, வரும் 17 ஆம் தேதி டெஸ்ட் தொடரை ஆடவுள்ளது. அதன்படி இன்று, ஆஸ்திரேலியா A அணியினருடன் இரண்டாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

முதலில் ப்ரித்வி ஷா – மயங்க அகர்வால் கூட்டணி களமிறங்கினார்கள். இதில் இரண்டு ரன்கள் மட்டுமே அடித்து மயங்க் அகர்வால் வெளியேற, அவரையடுத்து ஷுப்மன் கில் களமிறங்கினார். இருவரும் சிறப்பாக அடிவர, 40 ரன்கள் அடித்து ப்ரித்வி ஷா தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய ஹனுமன் விகாரி, 15 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரையடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, மத்தியில் இருந்த ஷுப்மன் கில் 43 ரன்கள் அடித்தார்.

பின்னர் களமிறங்கிய பும்ரா, அதிரடியாக ஆடத் தொடங்கினார். அவருக்கு முஹமது சிராஜ் கைகொடுக்க, இருவரும் சிறப்பாக ஆடிவந்தனர். இதில் பும்ரா, 57 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 55 ரன்கள் எடுத்து தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மத்தியில் ஆடிவந்த சிராஜ், 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 22 ரன்கள் அடித்தார். இறுதியாக இந்திய அணி, தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்கள் அடித்தது.

இதனையடுத்து ஆஸ்திரேலியா A அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரிஸ் – ஜோ பர்ன்ஸ் களமிறங்கினார்கள். 1 ஓவர் முடிவில் 6 ரன்கள் எடுத்த நிலையில், தற்பொழுது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி, 188 ரன்கள் பின்னடைவில் உள்ளது.

Published by
Surya

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

22 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago