ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாக சபை முன்வைத்த திட்டத்தை பிசிசிஐ மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், நேற்று கொல்கத்தா, சென்னை அணியில் தலா 2 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், நேற்று நடைபெறவிருந்த பெங்களூர், கொல்கத்தா போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று விருத்திமான் சஹா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் கொரோனா உறுதியானதை தொடர்ந்து பி.சி.சி.ஐ நடப்பு ஐபிஎல் தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாக சபை முன்வைத்த திட்டத்தை பிசிசிஐ மறுத்துவிட்டதாக இப்போது தகவல்கள் வெளிவருகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 13-வது ஐபிஎல் தொடர் சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நடைபெற்றது. ஏப்ரல் 9 ஆம் தேதி நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை குறையவில்லை. இதனால், ஐபிஎல் நடப்பு தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாக சபை முன்மொழிந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் தொடரை நடத்தும் திட்டத்திற்கு நான்கு ஐபிஎல் உரிமையாளர்கள் ஆதரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இந்த திட்டத்திற்கு அனுமத்தி வழங்கவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் நிர்வாக சபையின் முன்மொழிவை பிசிசிஐ ஏற்றுக்கொண்டிருந்தால் இவை அனைத்தையும் தவிர்த்து இருந்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…