இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐயின் முக்கிய அறிவுரை …!

Published by
Edison

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கடிதம் வாயிலாக அறிவுரை வழங்கியுள்ளார்.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு சென்றது.அதன்பின்னர்,போட்டியில் இந்திய அணியானது தோல்வியை தழுவியது.

இதனையடுத்து,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 23 இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவருக்கு,20 நாள் இடைவேளையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது.இதனால்,அவர் டர்ஹாமிற்கு இந்திய அணியுடன் பயணம் செய்ய மாட்டார்.

அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டர்ஹாமில் ஒரு உயிர் குமிழியில் மீண்டும் ஒன்றிணைக்கப்பட உள்ளது. கடந்த மாதம் நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்குப் பிறகு வீரர்களுக்கு இந்த இடைவெளி வழங்கப்பட்டது.

இதுகுறித்து,பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்:”ஆமாம், ஒரு வீரருக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் கடந்த எட்டு நாட்களாக தனிமையில் இருக்கிறார். அவர் அணியுடன் எந்த ஹோட்டலிலும் தங்கவில்லை, எனவே வேறு எந்த வீரரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் என்னால் அந்த வீரரின் பெயரை வெளியிட முடியாது”,என்று தெரிவித்தார்.

மேலும்,”இப்போதைக்கு வேறு எந்த வீரரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.எனினும்,எங்கள் செயலாளர் ஜெய் ஷா அனைத்து வீரர்களுக்கும் கொரோனா நெறிமுறைகளைப் பராமரிக்க ஒரு கடிதம் எழுதியுள்ளார் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்” என்று சுக்லா  கூறினார்.

அதன்படி,பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா,இந்திய அணி வீரர்களுக்கு எழுதிய தனது கடிதத்தில்,”அணிக்கு வழங்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி, வைரஸை எதிர்க்கும் முழு நோய் எதிர்ப்பு சக்தியல்ல,ஆனால்,பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது என்பதால்,நெரிசலான இடங்களை தவிர்க்க வேண்டும்”,என்று அறிவுறுத்தியுள்ளார்.

உண்மையில்,ஷாவின் கடிதம் குறிப்பாக விம்பிள்டன் மற்றும் யூரோ சாம்பியன்ஷிப்பிற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறாயினும்,கொரோனா பாதித்த வீரர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

Published by
Edison

Recent Posts

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

4 minutes ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

37 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

58 minutes ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

1 hour ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

2 hours ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

2 hours ago