டெஸ்ட் தொடருக்கு ஆயத்தம்…அறுவை சிகிச்சை செய்து கொண்ட பென் ஸ்டோக்ஸ்!

Published by
செந்தில்குமார்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் உடல் தகுதியுடன் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச முடியவில்லை. மேலும் இதனால், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கூட பேட்டராக மட்டுமே இடம்பெற்றார். அவரது உடல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க வில்லை என்பதால், உலகக் கோப்பை முடிந்த பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பென் ஸ்டோக்ஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில், அறுவை சிகிச்சை முடிந்தது என்று லண்டனின் குரோம்வெல் மருத்துவமனைக்கு வெளியே ஊன்றுகோல் உதவியுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, “மறுவாழ்வு இப்போது தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. ஜனவரி 24 முதல் மார்ச் 11 வரை இங்கிலாந்து அணி இந்தியாவுடன் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி இந்தியா வருவதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயிற்சி மேற்கொள்ள புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே அணி தெரிவித்தது.

அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் இந்தியா உடனான 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடர், டி20 உலகக்கோப்பை ஆகியவை கருத்தில் கொண்டு பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளதாக சென்னை அணி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

8 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

9 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago