#BREAKING: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆசிய கோப்பை தொடரை தொடர்ந்து, மிக முக்கிய ஐசிசி தொடரான ஒருநாள் உலக கோப்பை தொடர் இம்முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் அக்.5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

அதன்படி, அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.

உலக கோப்பை தொடருக்காக இந்தியா உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகி வருகின்றன. உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்த விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தனர்.

உலகக்கோப்பை தொடருக்கு 30 நாட்களுக்கு முன்னதாக அணி வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐசிசி கூறியிருந்தது. இதனால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்திய அணியில் 5 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர், 4 ஆல் ரவுண்டர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பு: அனைத்து அணிகளும் அணியில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய செப்டம்பர் 28 வரை அவகாசம் உள்ளது, அதன் பிறகு ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் ஐசிசியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

20 minutes ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

1 hour ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

2 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

3 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

3 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

4 hours ago