#BREAKING: ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகல் – சென்னை அணி அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அணி நிர்வாகம் அறிவிப்பு.

ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுகுவலி பிரச்சனை காரணமாக தீபக் சஹார் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

எங்களின் முக்கிய பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இல்லாததால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் காயங்கள் ஆட்டத்தின் ஒரு பகுதியாகும். தீபக் சஹார் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

சாஹர் 2018 முதல் சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்து நான்கு சீசன்களில் 58 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் வீரர்களின் 2022 சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சென்னை மீண்டும் வாங்கியது. காயம் காரணமாக தீபக் சஹார் விலகிய நிலையில், இவருக்கு பதில் மாற்று வீரர் யார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

9 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

9 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

11 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

11 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

12 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

12 hours ago