கோலி, தனது எனர்ஜியை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பதுதான் அடுத்த ஆண்டுகளில் நான் பார்க்க விரும்பும் ஒரு விஷயம் என்று 5-6 ஆண்டுகளுக்கு முன் தோனி கூறியதாக பிட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டனாக இருந்து வருபவர், விராட் கோலி. இவர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அந்தவகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பிட்டர்சன் பேசியுள்ளார்.
அப்பொழுது அவர், சில அம்சங்களின் அடிப்படையில் கோலியை எவ்வாறு மதிப்பிட்டார் என்பதை தோனி வெளிப்படுத்தியதாக கூறினார். 2016-ம் ஆண்டில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிக்காக பீட்டர்சன் விளையாடி வந்தார். அப்பொழுது அந்த தகவலை தோனி கூறியதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “5-6 ஆண்டுகளுக்கு முன்பு நான் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது தோனி, “விராட் தனது எனர்ஜியை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பதுதான் அடுத்த ஆண்டுகளில் நான் பார்க்க விரும்பும் ஒரு விஷயம். தற்பொழுது 5-6 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் கோலி, ஒரு குழந்தையாக இருந்ததைப் போலவே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…