சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இன்று 38-வது லீக் போட்டியில் சென்னை -கொல்கத்தா அணிகள் அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் விளையாடியது. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து சுப்மான் கில் ரன் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து, வெங்கடேஷ் ஐயர் 18 ரன்கள் எடுக்க பின்னர், களமிறங்கிய ராகுல் திருப்பதி சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் ரஸ்ஸல் வீசிய பந்தில் மோர்கனிடம் கேட்சை கொடுத்து 40 ரன்னில் வெளியேறினார். இவர்கள் கூட்டணியில் 74 ரன் எடுத்தனர். அடுத்த சில பந்தில் ஃபாஃப் டு பிளெசிஸ் 43 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய அம்பதி ராயுடு வந்த வேகத்தில் 10 ரன் எடுத்து வெளியேற, பின்னர் மொயின் அலி அதிரடி காட்ட 32 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய தோனி ஒரு அணியிலும், சுரேஷ் ரெய்னா 11 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழக்க சென்னை அணி இக்கட்டான சூழ்நிலையில் சென்றது. அப்போது களமிறங்க ஜடேஜா, சாம் கரண் களமிறங்க ஜடேஜா 4 பந்தில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி என 20 ரன்கள் விளாசி போட்டியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். பின்னர், கடைசி ஓவரில் 4 ரன் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் சாம் கரண் விக்கெட்டை இழக்க அடுத்து இறங்கிய ஷர்துல் தாக்கூர் 3 ரன்கள் எடுக்க அடுத்து பந்தில் ஜடேஜா விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் என்ற நிலையில் தீபக் சாஹர் ஒரு ரன் எடுத்து சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால், புள்ளி பட்டியலில் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு சென்றது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…