ஐபிஎல்-இல் மிரட்டிய CSK இளம் வீரர் பத்திரனா.! இலங்கை அணி கொடுத்த மிக பெரிய வாய்ப்பு.!

Published by
மணிகண்டன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் மதிஷ பத்திரனா இலங்கை அணிக்கான ஒருநாள் அணியில் அறிமுகமாகவுள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய இளம் பந்துவீச்சாளராக, கேப்டன் தோனியின் ‘குட்புக்’கில் இடம் பெற்றுள்ள இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் பத்திரனாவுக்கு இலங்கை அணி பெரிய வாய்ப்பை அளித்துள்ளது.

20 வயதான இளம் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரனாவை இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்த்துள்ளது இதன் மூலம் ஒருநாள் தொடரில் புதிரானா முதன் முதலாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகள் ஜூன் 2, 4 மற்றும் 7 ஆம் தேதிகளில் இலங்கையில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அவர் இலங்கை அணிக்காக 2 சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தார்.  நடந்து முடித்த ஐபிஎல் போட்டியில் மதிஷ பத்திரனா 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

6 minutes ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

26 minutes ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

1 hour ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

2 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

2 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

3 hours ago