இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும்.
சென்னை அணியில் கலீல் அகமது 3 விக்கெட்டும், நூர் அகமது, பத்திரனா தலா 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் பறித்தனர். 183 ரன்கள் இலக்குடன் சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரிலே ரச்சின் ரவீந்திரா ரன் அடிக்காமல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
பின்னர் ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி இருவரும் நிதானமாக விளையாடி சற்று அணியின் எண்ணிக்கையை சேர்த்தனர். இருப்பினும் ராகுல் திரிபாதி 23 ரன்கள் எடுத்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த சிவம் துபே வந்த வேகத்தில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டர் என மொத்தம் 18 ரன்கள் எடுத்து நடையை கட்டினார்.
அடுத்து வந்த விஜய் சங்கர் வந்த வேகத்தில் 9 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் சென்னையை நீ விக்கெட் பறிகொடுத்து வந்தாலும் மறுபுறம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி தனது அரை சாதத்தை பூர்த்தி செய்து 63 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய , தோனி 16 ரன்களும், ஜடேஜா 32* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார்.
இறுதியாக சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டையும், ஆர்ச்சர், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டையும் பறித்தனர். சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் அடைந்துள்ளது.
அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 2 போட்டியில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் அடைந்துள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…