“கோடி ரூபாய் கொடுத்தாலும் இத பண்ணமாட்டேன்” மொயீன் அலியின் வேண்டுகோளை ஏற்ற சென்னை அணி!

Published by
Surya

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த மொயின் அலி, தனது ஜெர்ஸியில் இருந்த மதுபான பிராண்டின் பெயரை நீக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது.

அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. அதனைதொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் மொயீன் அலி இணைந்துள்ளார். அப்பொழுது அவருக்கு வழங்கப்பட்ட ஜெர்சியில் SNJ10000 என்ற மதுபான கம்பெனியில் லோகோ இருந்தது. இதனைதொடர்ந்து மொயின் அலி, மதுபானம் அருந்துவது, அதனை தூண்டும் செயலில் ஈடுபடுவது தனது மதத்திற்கு எதிரான செயல் என்றும், மதுபான பிராண்டின் பெயரைத் தனது ஜெர்ஸியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மொயின் அலியின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை அணி நிர்வாகம், அவரின் ஜெர்சியில் இருந்த SNJ10000 லோகோவை நீக்க முடிவு செய்தது. கடந்த ஆண்டு மொயின் அலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

16 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

1 hour ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago