கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற 49 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி , பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் அடித்தது. 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், வாட்சன் ஆகிய இருவரும் களம் இறங்கினார்கள். நிதானமாக விளையாடி வந்த வாட்சன் 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், அம்பதி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள்.
சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடு அரைசதம் அடிக்காமல் 38 ரன் எடுத்து பெவிலியன் சென்றார்.இவரைத்தொடர்ந்து தோனி 1 ரன்னில் வெளியேறினார்.அதிரடியாகவும், நிதானமாகவும் விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசி 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.களத்தில் ஜடேஜா 31* ,சாம் 13 * ரன்களுடன் இருந்தனர் .இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப்…
சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது.…
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…