சென்னை அணி சாம்பியன்களைப் போல வலுவாகவும், சிறப்பாகவும் திரும்பி வரும் என பிராவோ நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். மேலும், ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக விலங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பாண்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது.
தொடர் தோல்வி காரணமாக சென்னை அணியையும், கேப்டன் தோனியையும் விமர்சிக்க தொடங்கினார்கள். டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகி, தாயகம் திரும்பவுள்ளதாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிராவோ வெளியிட்டுள்ள ஒரு விடியோவை சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் பிராவோ, சென்னை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களின் ஆதரவை அளித்து வாருங்கள் என கூறிய பிராவோ, தங்களால் முடிந்தளவு சிறப்பாக ஆடினோம். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததாக கூறியுள்ளார்.
தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்குமாரும், நாங்கள் சாம்பியன்களைப் போல வலுவாகவும், சிறப்பாகவும் வருவோம் என்று நம்பிக்கையுடன் கூறிய பிராவோ, நாங்கள் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறோம், சென்னை அணியின் மெம்பராகவும், ரசிகர்களாகவும் இருக்கு நாம் பெருமைப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…