முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 49 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை, பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் – நிதீஷ் ராணா களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணி அதிரடியாக ஆடிவந்த நிலையில், 26 ரன்களில் சுப்மன கில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து நரேன் களமிறங்க, 7 ரன்கள் மட்டுமே அடித்து பெவிலியன் திரும்பினார். சிறப்பாக ஆடிவந்த நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார்.
அதன்பின் 11 ரன்களில் ரின்கு சிங் வெளியேற, அரைசதம் விளாசிய 87 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் என்ஜிடி 2 விக்கெட்ளையும், சாண்ட்னர், கரண் சர்மா, ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…